மறவன்புலவு க சச்சிதானந்தன் எழுதுகிறேன்

127

சீசெல்சுத் தீவு தமிழரின் தீவு.

இந்தியாவுக்கான கடல் வழிச் சுற்றுப் பயணத்தை அறிந்த வாசுக்கோடகாமா காலத்தில் சீசெல்சுத் தீவு தமிழரின் தீவே.

சங்க காலப் பாண்டியர் சோழர் சேரர் தங்களுடைய கடல்வழிப் பயணங்களுக்கு மரக்கலங்களை இணக்க மரங்களுக்காக சீசெல்சுத் தீவுக்கு வந்து போயினர்.

மூன்று நீர் கலக்கும் முந்நீர்த் தீவுகள், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்த சோழர் வசம் இருந்தன, அவற்றுள் ஒன்று சீசெல்சுத் தீவு.

முனிவர் யோகியர் சித்தர் யாவரினதும் திருவோடு முந்நீர்த் தீவில் காய்க்கும் பனையின் காய் – பழம்.

சேரர் கடலில் மிதந்து சேரநாட்டு ஈழநாட்டுக் கடற்கரைகளில் சேரும் ஓடுகளே முனிவர் யோகியர் சித்தர் வைத்திருக்கும் திருவோடுகள்.

சீசெல்சு என்ற பிரெஞ்சுப் பெயர் வர முன்பேயே, முந்நீர்த் தீவுக்கு வாருங்கள், கப்பல் கட்டும் மரங்களை வெட்டலாம் எனப் பிரெஞ்சுக்காரரை அழைத்து வந்தோர் புதுச்சேரிச் தமிழர்.

220 ஆண்டுகளுக்குமுன் பிரஞ்சுக்காரர் இத்தீவுக்கு 45 பேரை அழைத்து வந்தனர். அவர்களுள் ஐவர் தமிழர். நெப்போலியனின் படைத்தளபதியின் பெயரான சீசெல்சு எனப் பெயரிட்டனர்.

இராமநாதபுரத்தை இலாலாபாத்து என மதுரை சுல்

SHARE