மலையகத்தில் முப்படையினருடன் இணைந்து டெங்கு நுளம்பு ஒழிப்பு வேலைதிட்டம் ஆரம்பம்

229

நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளிலும் டெங்கு நுளம்பு ஒழிப்பு வேலைதிட்டம் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நாட்டில் வேகமாக பரவிவரும் டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்காக மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், ஆகியோருடன் முப்படையினரும் குறித்த வேலைத்திட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

குறித்த வேலைத்திட்டமானது இன்று முதல் 30 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரை 3 தினங்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்படவுள்ளது.

அந்த வகையில் மலையகத்திலும் அனைத்து பாடசாலைகளிலும் டெங்கு ஒழிப்பு சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்தில் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள் மற்றும் பாடசாலைகளுக்கு அருகாமையிலுள்ளோர் ஒன்றிணைந்து பாடசாலையையும் அதனை அண்டியுள்ள பகுதிகளையும் சுத்தம் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதன்போது, நுளம்புகள் பரவும் இடங்களை அழித்து புகை விசுறும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதோடு, பாடசாலை வளவுகளை துப்பரவு செய்யும் நடவடிக்கையில் ஈடுப்பட்டிருந்தமை குறிப்பிடக்கது.

இதுவேளை, குறித்த டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்திற்கு முப்படையினர், காவற்துறையினர் மற்றும் சிவில் பாதுகாப்பு படையணியினர் இணைந்து கொண்டமை குறிப்பிடதக்கது.

 

 

 

SHARE