மலையகத்தில் மேல் கொத்மலை நீர்த்தேக்க வான் கதவு திறப்பு

116

 

காலநிலை சீர்கேட்டின் காரணமாக பெய்து வரும் அடை மழையினால் மேல் கொத்மலை நீர்தேக்க பகுதியின் நீர்மட்டம் உயர்வடைந்ததால் ஒரு வான்கதவு திறக்கப்பட்டுள்ளது.

குறித்த நீர்த்தேக்கத்தின் வான்கதவானது நேற்று(28.12.2023) காலை திறக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அதிகரித்த நீர்மட்டம்
இந்நிலையில், அணைக்கட்டிற்கு கீழ் பகுதியில் ஆற்றை பயன்படுத்துபவர்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

அத்தோடு மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவு திறந்து விடப்பட்டதன் காரணமாக சென்.கிளயார் நீர்வீழ்ச்சியின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதோடு, டெவோன் நீர்வீழ்ச்சியின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளதாக கூறப்படுகின்றது.

SHARE