அருள்மிகு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி தேவஸ்தான 27 வது ஆவணி
விநாயகர் மஹா சதுர்த்தி விழாவில் விநாயகர் மஹா சதுர்த்தி தினத்தை முன்னிட்டு (07.09.2016) பகல் 12.00 மணிக்கு பிரமாண்டமான ஸ்ரீ மஹா கணபதி திருவுருவ சிலைக்கு விசேட பூஜை நிகழப்பெற்று, விநாயகர் திருவுருவ சிலை மங்கள வாத்தியங்கள் முழங்க, கரகம், காவடியடன் வெகு விமர்சையாக புசல்லாவ நகரினூடாக ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு, இரட்டைப்பாதை ஸ்ரீ விநாயகர் ஆலயத்தின் அருகிலுள்ள ஆற்றில் இறக்கும் வைபவம் இடம்பெற்றது. இதில் பெருந்திரளான பக்த அடியார்கள் கலந்துகொண்டார்கள். கிரியைகள் யாவும் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ நாராயண சபாரத்தின குருக்கள் தலைமையில் நடைபெற்றது.