மல்லாவி யோகபுரத்தில் மே தினத்தில் மக்கள் பேரெழுச்சி
முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவி யோகபுரத்தில் சுமூகவிழிப்புணர்வுக்கான மக்கள் அமைப்பினரின் ஏற்பாட்டில் தொழிலாளர் விவசாயிகள் வாழ்வுரிமைக் கட்சியின் செயலாளர் நா.தேவகிருஸ்ணண் தலைமையில் மேதின நிகழ்வுகள் நடைபெற்றிருந்தது.
மே தின நிகழ்வானது மல்லாவி வைத்தியசாலை முன்பாக ஆரம்பமாகி பிரதான வீதிவழியாக பேரணியாக சென்று யோகபுரம் விழையாட்டு மைதானத்தை சென்றடைந்தது. பேரணியில் சென்றவர்கள் கிராமம் புறங்களில் சாராயக்கடைகளை இழுத்து மூடு, பட்டதாரிகளுக்கு வேலை வழங்கு, அரச அதிகாரிகள் ஊழல் மற்றும் அதிகார துஸ்பிரயோககங்களை தடுத்து நிறுத்து, கிரமம்புற பாடசாலைகள் வைத்தியசாலைகளை அபிவிருத்தி செய் போன்ற பதாதைகளை தாங்கியவாறு சென்றிருந்தனர்.
நிகழ்வில் சமூகவிழிப்புணர்வுக்கான மக்கள் அமைப்பு, விவசாயிகள் தொழிலாளர் வாழ்;வுரிமைக் கட்சி, நிலைபேறான விவசாய ஆராட்சி மற்றும் அபிவிருத்தி நிலையத்தை சேர்ந்த கலாநிதி லயனல் வீரக்கோண் மற்றும் உறுப்பினர்கள் பொது மக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.