மழைக்காலங்களில் சளி, காய்ச்சல் மிக ஈஸியாக வந்து தொற்றிக் கொள்ளும், அதுவும் குழந்தைகளுக்கு சொல்லவா வேண்டும்.
இந்த காலத்தில் மிகவும் சுத்தமாக தொற்று கிருமிகள் அண்டாதவாறு பார்த்துக் கொள்வது அவசியம்.
மழை காலங்களில் நாம் குடை அல்லது ரெயின்கோட் எடுத்துச் செல்வதை மறக்க கூடாது.
வீட்டில் நுழைந்ததும் சுடுநீரில் கை, கால்களைக் கழுவ வேண்டும், வெந்நீரில் குளிக்க வேண்டும்.
கை, கால்களை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும், நன்றாக கொதிக்க வைத்த தண்ணீரை குடிக்கனும்.
ஐஸ்கிரீம், குளிர் உணவு சாப்பிடுவது, அடிக்கடி தலைக்கு குளிப்பது, ஈக்கள் மொய்த்த உணவு சாப்பிடுவது போன்றவைகளை தவிர்க்கவும்.இருமல், தும்மல் வரும்போது கைக்குட்டையால் முகத்தை மறைக்க வேண்டும்.
சந்தான காய்கறிகள், பழங்கள், சூப்புகளைச் சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி கூடும்.
இப்படி சில விஷயங்களை நாம் கையாண்டால் மழைக்கால நோய்கள் நம்மை அண்டவிடாமல் பார்த்துக்கொள்ளலாம்.