மவுஸ்ஸாகலை நீர்த்தேக்கத்தில் கழிவுகளை கொட்டுபவர்களுக்கு எச்சரிக்கை

195

மஸ்கெலியா மவுஸ்ஸாகலை நீர்த்தேக்கத்தில் மற்றும் நீர்த்தேக்கத்திற்கு நீர் உள்வாங்கும் பகுதிகளில் குப்பைகள் மற்றும் அசுத்த கழிவுகளை கொட்டுபவர்களுக்கு எதிர்காலத்தில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டிரோன் ரத்நாயக்க தெரிவித்தார்.

மஸ்கெலியா மவுஸ்ஸாகலை நீர்த்தேக்கத்தில் குப்பைகள் அதிகரிக்கப்பட்டு சூழல் மாசடைவு ஏற்பட்டதனால் களனி கங்கைக்கு செல்லும் இந்த நீரில் மாசுத் தன்மை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இதனால் மவுஸ்ஸாகலை நீர்த்தேக்கத்தில்கரையோர பகுதிகள் மற்றும் நீரேந்தும் பகுதிகளில் நிரம்பி இருக்கும் குப்பைகளை சேகரிக்கும் வேலைத்திட்டம்ஒன்று இன்று (17) முன்னெடுக்கப்பட்டது.

இந்த வேலைத்திட்டத்தினை மஸ்கெலியா பொலிஸார் மற்றும் மஸ்கெலியா சிவில்அமைப்பினர் ஆகியோர் ஒன்றிணைந்து மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது நீர்த்தேக்கத்தின் கரையோர பகுதியில் துர்நாற்றத்தை வீசக்கூடிய நிலையில்காணப்பட்ட குப்பைகளை அகற்றும் பணி முன்னெடுக்கப்பட்டது.

இதேவேளை, எதிர்வரும் காலத்தில் மவுஸ்ஸாகலை நீரேந்தும் பகுதிகளிலும் நீர் உள்வாங்கும் பகுதிகளிலும் காணப்படும் நீர் ஓடைகளில் பொதுமக்கள் கழிவுகளை கொட்டுவார்களாயின் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எச்சரிக்கை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

625-0-560-320-160-600-053-800-668-160-90-2

625-0-560-320-160-600-053-800-668-160-90-1

SHARE