மஹிந்த ராஜபக்சவின் இராணுவப் பாதுகாப்புப் பிரிவை விலக்கிக் கொள்ளுமாறு பாதுகாப்பு அமைச்சிடமிருந்து இன்னும் உத்தியோகபூர்வ அறிவிப்பு கிடைக்கவில்லை என்று இராணுவம் தெரிவித்துள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்சவின் பாதுகாப்புக்காக வழங்கப்பட்டிருந்த 500 இராணுவத்தினரைக் கொண்ட அணியினரை உடனடியாக விலகிக் கொள்ளுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.
கடந்த புதன்கிழமை நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க சமர்ப்பித்த அறிக்கையை அடுத்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பில் இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ஜெயநாத் ஜயவீரவிடம் வினவிய போது, இந்த விடயம் பற்றி பாதுகாப்பு அமைச்சிடமிருந்து இன்றும் உத்தியோகபூர்வமாக எந்தவொரு அறிவிப்பும் இராணுவத்துக்கு விடுக்கப்படவில்லை என்று கூறினார்.