மஹிந்தவின் பாதுகாப்பை குறைக்குமாறு சந்திரிகா கோரிக்கை

342
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்­வின் பாதுகாப்பைக் குறைக் குமாறு, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க கோரியுள்ளார்.

வெளிநாடு சென்றிருந்த சந்திரிகா நாடு திரும்பியவுடன் நாட்டின் நிலை மைகள் குறித்து ஆராய்ந்துள்ளார். குறிப்பாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவைப் பற்றி விசாரித்துள்ளார்.

மஹிந்தவைப் பிரதமராக்கும் நோக் கில் நடைபெறும் கூட்டத் தொடர் குறித்து அதிருப்தியை வெளியிட் டுள்ளார். மஹிந்தவுக்கு அரசு எவ் வாறான சலுகைகளை வழங்குகின் றது என்பது குறித்தும் ஆராய்ந்துள்ளார்.

இதன்போது பெரும் எண்ணிக்கை யிலான பாதுகாப்பு உத்தியோகத் தர்கள் மஹிந்தவின் பாதுகாப்புக் காகக் கடமையில் அமர்த்தப்பட் டுள்ளதை அவர் தெரிந்து கொண்டார்.

ஜனாதிபதி செயலகத்துக்கு அழைப்பை ஏற்படுத்தி எனக்கு அவ்வளவு பாது காப்பு வழங்கப்படவில்லை. மஹிந் தவுக்கு இவ்வளவு பாதுகாப்பு வழங் கக் கூடாது என சந்திரிகா கூறி யுள்ளதாக சிங்களப் பத்திரிகை யயான்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதேவேளை, மஹிந்தவின் பாதுகாப்பு வாகனங்களும் அகற்றப்பட வுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பாதுகாப்பு நோக்கில் வழங்கப் பட் டிருந்த விசேட வாகனங்கள் பல அகற்றப்பட உள்ளன. பொலிஸ் மா அதிபரின் உத்தரவுக்கு அமைய இந்த வாகனங்கள் மீளப் பெற்றுக் கொள்ளப்படவுள்ளன.

SHARE