மஹிந்தவிற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க முடியும் – எஸ்.பீ.திஸாநாயக்க

276

ஒரு கட்சியில் இருந்த வண்ணம் புதிய கட்சியொன்றை ஸ்தாபிக்கின்றமை தொடர்பில் கலந்துரையாடல்களில் ஈடுபட்டுவரும் உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எஸ்.பீ.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அதேவேளை, கட்சியின் ஆலோசகராக செயற்பட்டு வரும் மஹிந்த ராஜபக்ஸவிற்கு எதிராகவும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளர் நீர்கொழும்பு – கொச்சிகடை பகுதியில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் கலந்துக்கொண்ட கட்சியின் உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும், அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பது என்பது அவசர முடிவு அல்லவெனவும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொருளாளர் அமைச்சர் எஸ்.பீ.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

s.b.dissanayake-newsfirst-626x380

SHARE