மஹிந்த கட்சியை விட்டு விலகினாலும் நான் சுதந்திரக் கட்சியை விட்டு போக மாட்டேன்! ரி.பி. ஏக்கநாயக்க

286

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கட்சியை விட்டு விலகினாலும் தாம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை விட்டு விலகப் போவதில்லை என காணி இராஜாங்க அமைச்சரும் குருணாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ரி.பி. ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

சிங்கள பத்திரிகையொன்றுக்கு அளித்த விஷேட நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்…

நான் நல்லவொரு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினராவேன். எனவே கட்சியை விட்டு விலகிச் சென்று புதிய கட்சியொன்றின் உறுப்புரிமை பெற்றுக்கொள்ளும் திட்டமில்லை.

அத்துடன், கட்சியை பிளவடையச் செய்யும் பாவச் செயல்களில் பங்கேற்காது கட்சியை வெற்றியடைச் செய்யச் செய்ய முயற்சிப்பேன்.

எவ்வாறாயினும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிளவடையச் செய்ய மஹிந்த முயற்சிப்பார் என தாம் கருதவில்லை.

எனினும் அவர் விரும்பிய தீர்மானம் எடுக்க அவருக்கு உரிமையுண்டு என்பதனை தாம் உள்ளிட்டவர்கள் மறுப்பதற்குமில்லை.

இந்நிலையில், அரசியல் யதார்த்தங்களை புரிந்து கொள்ள வேண்டும். உணர்வுகளுக்கு அடிமையாகி தீர்மானங்களை எடுக்கக் கூடாது.

இதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலமையில் முன்னோக்கிச் செல்வதனைத் தவிர வேறு மாற்று வழி கிடையாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

1783241907ekanayake3

SHARE