மஹிந்த கொடிதுவக்கு விளக்கமறியலில்

103

 

அவலோகிதேஸ்வரா என்ற பெயரில் தோன்றி பௌத்த மதத்தை இழிவுபடுத்தும் வகையில் பிரசங்கம் செய்த வேளையில் கைது செய்யப்பட்ட மஹிந்த கொடிதுவக்கு எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபரை இன்று (16) கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போதே நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

கணனி குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளினால் பன்னிப்பிட்டியவில் வைத்து சந்தேகநபர் நேற்று (15) கைது செய்யப்பட்டிருந்தார்.

மகிந்த கொடிதுவாக்கு என்ற நபர், கடந்த 1ஆம் திகதி எகிப்தில் இருந்து இலங்கைக்கு வந்திருந்த நிலையில், அவர் பல இடங்களுக்குச் சென்று சொற்பொழிவாற்றுவதும், அவரைப் பின்பற்றுபவர்கள் அவருக்கு வணக்கம் செலுத்துவதும் போன்ற காணொளிகள் சமூக வலைத்தளங்களில் பரவியது.

இதன்படி, குறித்த நபரின் விரிவுரைகள் மூலம் புத்தரின் குணாதிசயங்கள் மற்றும் பௌத்த மத போதனைகள் அவமதிக்கப்படுவதாக பௌத்த விவகார ஆணையாளர் நாயகம் உட்பட பல தரப்பினரும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.

இதன்படி, கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் குறித்த நபரிடம் விசாரணைகளை ஆரம்பித்ததுடன், இது தொடர்பில் கோட்டை நீதவான் நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்து சந்தேகநபருக்கு வெளிநாட்டுப் பயணத்தடையையும் பெற்றுக்கொண்டனர்.

இந்த நிலையில், கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் அவலோகிதேஸ்வர என்ற சந்தேக நபரை நேற்று பிற்பகல் பன்னிபிட்டிய பிரதேசத்தில் வைத்து கைது செய்துள்ளனர்.

இதனையடுத்து விசாரணை அதிகாரிகள் சந்தேக நபர் தங்கியிருந்த கெஸ்பேவ மகந்தன சர்வோதய வீதியில் உள்ள இரண்டு மாடி வீட்டிற்கு சந்தேக நபரை அழைத்துச் சென்று அந்த வீட்டை சோதனையிட்டனர்.

பின்னர், அவலோகிதேஸ்வரா என்ற சந்தேக நபர், கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு விசாரணைக்காக அழைத்து வரப்பட்டிருந்தார்.

SHARE