மஹிந்த தலைமையிலான புதிய கூட்டமைப்புக்கு பெரும்பான்மையினர் இணக்கம்!

249

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் என 1401 பிரதிநிதிகள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் தலைமைத்துவத்தின் கீழ் பணியாற்ற இணக்கம் தெரிவித்துள்ளனர்.

நீர்கொழும்பிலுள்ள பிரபல விடுதியொன்றில் நேற்று (14) ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகள் சிலர் ஒன்று கூடி கலந்துரையாடல்களை நடாத்தியிருந்தனர்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியிலோ அல்லது வேறொரு கூட்டமைப்பின் கீழோ எதிர்வரும் தேர்தலில் போட்டியிடுவதற்கு தலைமைத்துவத்தை வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிடம், உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதன்போது ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் உள்ளூராட்சி மன்றங்களைச் சேர்ந்த 1437 பேரில், பெரும்பாலானோர் இந்த கூட்டத்திற்கு பிரசன்னமாகியிருந்தமை விசேட அம்சமாகும்.

நாடு முழுவதையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் உள்ளூராட்சி மன்றங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் இந்த கூட்டத்தில் கலந்துக்கொண்டிருந்ததுடன், ஐந்து யோசனைகளும் இதன்போது நிறைவேற்றப்பட்டிருந்தன.

இதன்படி, உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடாத்துமாறு அரசாங்கத்திற்கு அழுத்தங்களை கொடுத்தல், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் தமது அமைச்சு பதவிகளிலிருந்து விலகுதல், அரசியல் வேட்டைக்கு எதிர்ப்பு தெரிவித்தல், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பிளவுப்படுவதற்கான பொறுப்பை கட்சியின் தலைமைத்துவம் ஏற்றுக் கொள்ளல் மற்றும் புதிய அரசியல் கூட்டமைப்பொன்றை ஸ்தாபித்து அதற்கான தலைமைத்துவத்தை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ வழங்குதல் போன்ற யோசனைகள் நிறைவேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

mahintha 647dq

SHARE