மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் காலியான கஜானாவையே எங்களிடம் ஒப்படைத்து சென்றுள்ளது!

316
பொதுமக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் அமைச்சர்களும், அதிகாரிகளும் ஒன்றிணைந்து செயற்பட முன்வர வேண்டுமென்று நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தேசிய அரசாங்கத்தின் நிதியமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து கொண்ட ரவி கருணாநாயக்க நேற்று மாலை நிதியமைச்சில் தனது கடமைகளைப்பொறுப்பேற்றுக் கொண்டார்.

அதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அமைச்சர் ரவி கருணாநாயக்க,

மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் காலியான கஜானாவையே எங்களிடம் ஒப்படைத்துச் சென்றது. அதனை நிரப்பும் பொறுப்பு எம்மிடம் சாட்டப்பட்டுள்ளது.

அரசியல் ரீதியான வாதப் பிரதிவாதங்களை ஒதுக்கி வைத்து விட்டு, நாட்டு மக்களின் நலனுக்காக செயற்பட வேண்டிய தருணம் இது. பொதுமக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் அவர்களுக்கு பொருளாதார பலாபலன்களை பெற்றுக் கொடுக்க வேண்டும்.

ஊழல்களை ஒழித்து, அர்ப்பணிப்புடன் செயற்பட்டால் மாத்திரமே எமது இலக்குகளை அடைந்து, தூய்மையான அரசாங்கம் ஒன்றை உருவாக்க முடியும். அதற்காக அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட முன்வர வேண்டுமென்றும் அமைச்சர் ரவி கருணாநாயக்க அழைப்பு விடுத்துள்ளார்.

SHARE