பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டியது மஹிந்த ராஜபக்ஸவின் ஜனநாயகக் கடமை. இருப்பினும், பெரும்பான்மையை அவர் பாராளுமன்றத்தில் நிரூபிக்கவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் குறிப்பிட்டார்.
பணம் வழங்கி பாராளுமன்ற உறுப்பினர்களை வாங்க பெருமுயற்சி இடம்பெற்ற விடயம் அனைவருக்கும் தெரியும். இருந்தும், அவர்களால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியவில்லை என இரா. சம்பந்தன் சுட்டிக்காட்டினார்.
கடந்த 14 ஆம் திகதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை முதலில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. 122 பாராளுமன்ற உறுப்பினர்கள் அவர் மீது நம்பிக்கையில்லை என தெரிவித்து கையெழுத்திட்டு சபாநாயகரிடம் சமர்ப்பித்தனர். இலத்திரனியல் ஊடகம் மூலம் வாக்கெடுப்பு நடத்த மீண்டும் பாராளுமன்றம் கூடியது. ஆனால், மஹிந்த ராஜபக்ஸ தரப்பினர் பாராளுமன்றத்தில் குழப்பமேற்படுத்தி, சபாநாயகர் வருகையைக் குழப்பினார்கள். மூன்றாவது முறையாகவும் நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பிரதமராகப் பதவி வகிக்க மஹிந்த ராஜபக்ஸவிற்கு உரிமை இல்லை. உடனடியாக அவர் பதவி விலக வேண்டும். இல்லாவிட்டால் அவர் ஜனநாயக விரோதியாவார்.
பாராளுமன்றத்தில் இடம்பெற்ற அமளிதுமளியை அடுத்து மீண்டும் பாராளுமன்றம் எதிர்வரும் 19ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, தினப்புயல் செய்தியாளரின் கேள்விகளுக்கு பதிலளித்த போதே எதிர்க்கட்சித் தலைவர் இதனைக் குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தின் பெரும்பான்மை தீர்மானத்துக்கு மஹிந்த ராஜபக்ஷவும் அவரது அமைச்சரவையும் பதவியிலிருந்து விலக்கப்பட்டுள்ளது. எனவே பதவியில் நீடிப்பதற்கு எவ்வித உரிமையும் இல்லை. ஆகவே அவர்கள் உடனடியாக பதவி விலக வேண்டும் இல்லையெனில் அவர்கள் ஜனநாயக விரோதவாதிகளாவர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார்.பாராளுமன்றம் இன்று பெரும் அமளிதுமளிக்கு மத்தியில் கூடி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டதையடுத்து பாராளுமன்றத்தை விட்டு வெளியேறும் போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். கடந்த மாதம் 26 ஆம் திகதி ஜனாதிபதியால் மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த பிரச்சினை உருவானது. இவ்வாறு ஜனாதிபதியினால் பிரதமராக நியமிக்கப்பட்டவர் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டியது ஒரு ஜனநாயக கடமையாகும். ஆனால் அந்த கடமையை அவர் நிறைவேற்றத் தவறி விட்டார். அத்துடன் பாராளுமன்றத்துக்கு சமுகமளித்து ஒரு பிரேரணையை நிறைவேற்றி தனக்கு பெரும்பான்மை உள்ளதாக அவர் நிரூபிக்கத் தவறிவிட்டார்.
அதற்கு மாறாக சக உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்டு, பணம் வழங்கப்பட்டு உறுப்பினர்களை விலை கொடுத்து வாங்குவதற்கு தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதனை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள். அவ்வாறான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும் கூட மஹிந்தவினால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியவில்லை. அந்த காரணத்தின் நிமித்தம் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் அவர் மீது நம்பிக்கையில்லா பிரேரணை தீர்மானத்தை கொண்டு வந்து 14 ஆம் திகதி நிறைவேற்றினர். பாராளுமன்றத்தில் ஏற்பட்ட குழப்பத்தின் காரணமாக அந்த தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலமாக நிறவேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து 122 பாராளுமன்ற உறுப்பினர்கள் தமக்கு மஹிந்த ராஜபக்ஷவின் மீது நம்பிக்கை இல்லை என்று கையொப்பமிட்டு சபாநாயகரிடத்தில் கடிதம் மூலமாக ஒப்படைத்தனர். 15 ஆம் திகதி பாராளுமன்றம் கூடிய போது மஹிந்த ராஜபக்ஷ ஒரு உரை நிகழத்தினார். அந்த உரை மீது பாராளுமன்றத்ததுக்கு நம்பிக்கை இல்யை எனவும் அவர் மீது நம்பிக்கையில்லை எனவும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இவை அனைத்தும் குரல் வாக்கெடுப்பு மூலமாக நிறவேற்றப்பட்ட நிறேவற்றமாகும். ஒரு புதிய தீர்மானத்தை பாராளுமன்றத்தில் ஒன்றில் நேர் வழியினால் அல்லது எலக்ரோனிக் முறையினால் நிறேவற்றப்பட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டு இன்று பாராளுமன்றம் பாராளுமன்றம் கூடியது. அதனடிப்படையில் இன்று பாராளுமன்றம் கூடியபோது சாபாநயகர் வரும்போது அவரை சபைக்குள் நுழைய விடாமல் அவரது ஆசனத்தை சூழ மஹிந்த ராஜபக்ஷவினுடைய ஆதரவு உறுப்பினர்கள் அவர் வருவதை தடுத்தார்கள்.<p>இருந்தபோதும் கூட பொலிஸ் பாதுகாப்புடன் சபைக்குள் தாமதமாக நுழைந்து அந்த தீர்மானத்தை மீண்டும் வாக்கெடுப்புக்கு விட்டு நிறைவேற்றியதன் மூலம் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் புதிய அமைச்சரவை மீது நம்பிக்கையில்லை என்றத் தீர்மானம் மூன்றாவது முறையாகவும் நிறைவேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஆகவே பாராளுமன்றத்தின் பெரும்பான்மை தீர்மானத்துக்கு அமைவாக அவர் பதவியிலிருந்து விலக்கப்பட்டுள்ளார். எனவே தற்போது அவர் பதவியில் நீடிப்பதற்கு எவ்வித உரிமையும் இல்லை. அத்துடன் அமைச்சரவையில் உள்ளவர்களுக்கும் தொடர்ந்தும் அமைச்சர்களாக இருப்பதற்கு எவ்வித உரிமையும் இல்லை. ஆகவே அவர்கள் உடனடியாக பதவி விலக வேண்டும் இல்லையென் அவர்கள் ஜனநாயக விரோதவாதிகளாவர். அந்த வகையில் பாராளுமன்றத்தில் பொரும்பான்மையில்லாத பிரதமரோ அமைச்சரவையோ ஒரு போதும் நாட்டில் அரசாங்கம் அமைத்து ஆட்சி புரிய முடியாது. அது சட்டத்திற்கும், அரசியல் சாசனத்துக்கும், ஜனநாயகத்துக்கும் விரோதமானது எனவும் குறிப்பிட்டார்.
மஹிந்தவுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட பிரேரணை ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பு
பாராளுமன்றத்தின் நிலையியல் கட்டளையின் பிரகாரம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீண்டும் 122 பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது என சபாநாயகர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எழுத்து மூலமாக அறிவித்துள்ளார் என சபாநாயகர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும் இவ்விடயத்தினை கருத்திற் கொண்டு அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாராளுமன்றத்துக்காக உயிரையும் கொடுப்பேன் – சபாநாயகர்
அச்சுறுத்தல்கள் மற்றும் மிரட்டல்கள் உள்ளிட்ட அனைத்து வகையான சவால்களையும் எதிர்கொண்டு பாராளுமன்றத்தின் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கு உயிரைக் கொடுத்தேனும் செயற்படுவேன் என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
மேலும் நாட்டை நேசிக்கும் அனைத்து இன மக்களும் பொறுப்புணர்வுடனும் அமைதியாகவும் செயற்பட வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
ஆளும் தரப்பின் ஜனநாயக விரோத செயற்பாடுகளுக்கு கண்டனத்தை தெரிவிக்கும் வகையில் சபாநாயகர் கருஜயசூரிய விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மைத்திரியே முழுக் காரணம் – அநுரகுமார
பாராளுமன்றத்தைக் கூட்டினால் கொலைகள் இடம்பெற வாய்புண்டு என்ற அச்சத்தினாலே பாராளுமன்றத்தை கலைத்ததாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தை கலைத்தமைக்கான காரணத்தை தெரிவிக்கும் முகமாக வெளியிட்டிருந்த அறிக்கையில் தெரிவித்திருந்தார். அவர் தெரிவித்ததைப் போன்று பாராளுமன்றத்தில் கொலை சதித்திட்டத்தினை மேற்கொண்டிருந்தவர்கள் அவரது ஆதரவாளர்களே என்பது இன்று நிரூபணமாகியுள்ளது என மக்கள் விடுதலை முன்னணி தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
பாராளுமன்ற அமர்வு இன்று வெள்ளிக்கிழமை கூடியிலிருந்து போது மஹிந்தராஜபக்ஷ தரப்பினரால் ஏற்படுத்தப்பட்ட அமளிதுமளியின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் குறிப்பிடுகையில்,
மஹிந்த ராஜபக்ஷ மற்றும் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவான பாராளுமன்ற உறுப்பினர்கள், சபாநாயகர் மற்றும் அவரது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகளை தாக்கி கொலை செய்ய முற்பட்டனர்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொலை சதி முயற்சி செய்யப்பட்டதாக அண்மையில் தெரிவித்திருந்தார். அவருடைய தரப்பினரே அந்த கொலைச்சதிக்காரர்கள் என இன்று உறுதியாகியுள்ளது. காரணம் அந்த இரு தரப்பினர் தவிர ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தமது இருக்கைகளில் அமைதியான முறையில் அமர்ந்திருந்தனர் என அவர் மேலும் தெரிவித்தார்.