மஹிந்த ராஜபக்சவும் நாமல் ராஜபக்ஸவும் பாராளுமன்றிற்குள் பிரவேசிப்பதற்கு முன்னதாக செல்பீ ஒன்றை எடுத்துக்கொண்டுள்ளனர்:-

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இன்றைய தினம் பாராளுமன்ற உறுப்பினர் உறுப்பினாகின்றார்.
முதல் வரிசையில் இரண்டாம் ஆசனத்தில் மஹிந்த ராஜபக்ஸ அமர்ந்துள்ளார்.
முதல் ஆசனத்தில் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் நிமால் சிறிபால டி சில்வா அமர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸவை, பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட ஆளும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வரவேற்றுள்ளனர்.
பாராளுமன்ற விவகாரம் தொடர்பில் மஹிந்த ராஜபக்ஸ முன்னுரிமை வழங்கியமைக்கு, பிரதமர் ரணில் விக்ரமசிங்க நன்றி பாராட்டியுள்ளார்.
இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் அவரது புதல்வரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஸவும் பாராளுமன்றிற்குள் பிரவேசிப்பதற்கு முன்னதாக செல்பீ ஒன்றை எடுத்துக்கொண்டுள்ளனர்.
“இதனை விடவும் பெருமிதமான தருணமில்லை, நாட்டுக்கு அளப்பரிய சேவைகளை ஆற்றிய அரச தலைவருடன் பாராளுமன்றம் செல்லக் கிடைத்தமை வாழ்க்கையின் மிகப் பெரிய பாக்கியமாக கருதுகின்றேன்” என டுவிட்டரில் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.