மாகாண சபைத் தேர்தல்களை உரிய முறையில் நடத்துவது தொடர்பில் நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜயசூரியவை சந்தித்துப் பேச தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தீர்மானித்துள்ளார். இதன் பிரகாரம் இன்று மாலை இந்தச் சந்திப்பு நாடாளுமன்ற தொகுதியில் நடைபெறவுள்ளது. இதன்போது உரிய திகதியில் மாகாண சபைத் தேர்தல்களை நடத்த நாடாளுமன்றத்தின் ஒத்துழைப்பைப் பெற்றுத் தருமாறு சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய வேண்டுகோள் ஒன்றை முன்வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
மாகாண சபைத் தேர்தல் தொடர்பான திருத்தச் சட்டங்களை துரிதகதியில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றித் தருமாறும் தேர்தல்களை தொடர்ந்தும் பிற்போடுவது சட்டவிரோதம் என்றும் அவர் சபாநாயகரிடம் சுட்டிக்காட்டவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.