மாங்கல்ய பலத்துடன் செல்வ வளம் தரும் ஆடி வெள்ளி

211

ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாக அமைகிறது. அத்துடன், ஆடி மாதத்தில் வரும் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகள் தனித்துவம் வாய்ந்தவையாக அமைகின்றன.

அந்த வகையில் ஆடி மாதத்தின் முதல் வெள்ளியான இன்று மகாலட்சுமியை வழிபட்டால் வீட்டில் செல்வ வளம் பெருகும்.

ஆடிமாதத்தின் முதல் வெள்ளியன்று விரதம் இருந்து அம்மனை தரிசித்து சுமங்கலிப் பெண்கள் கணவனின் ஆயுள் அதிகரிக்கவும், திருமணமாகாத பெண்கள் விரைவில் திருமணம் கூடி வரவும் பிரார்த்தனை செய்து பலனை பெற்றுக் கொள்ள முடியும்.

ஆடி மாதம் முழுவதும் ஆலயங்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்படுவதுடன், செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அம்மனுக்கு விசேட அபிஷேங்களும், தீப ஆராதனைகளும் மேற்கொள்ளப்பட்டுகின்றன.

SHARE