கல்விக்காக கரம்கொடுக்கவேண்டும் என்னும் உயரிய நோக்கோடு வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களது 2016 ஆம் ஆண்டுக்கான பிராமண அடிப்படையிலான நன்கொடை (CBG ) நிதியில் இருந்து, மன்னார் வங்காலை, மற்றும் தலைமன்னார் கிராமங்களை சேர்ந்த மாணவர்களுக்கான இரண்டு துவிச்சக்கரவண்டிகள் அவர்களது கல்வி நடவடிக்கைக்கு உகந்தவகையில் அமைச்சர் டெனிஸ்வரன் மற்றும் மாகாண கிராம அபிவிருத்தி பணிப்பாளர் ஜே.ஜே.சி.பெலிசியன் ஆகியோரால் 30-09-2016 வெள்ளிக்கிழமை மன்னாரில் உள்ள அமைச்சர் உப அலுவலகத்தில் வைத்து வழங்கிவைக்கப்பட்டது.

