மாணவர் கௌரவிப்பு நிகழ்வு

241

வரணி மத்தியகல்லூரியில் கற்று மூன்று ‘ஏ’ தர சித்திகளைப்பெற்று பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகிய மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு 22.1.2016 வெள்ளிக்கிழமை கல்லூரி பிரதான மண்டபத்தில் கல்லூரி முதல்வர் திரு க. மங்களேஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது. நிகழ்வில் பிரதம அதிதியாக தென்மராட்சி வலய அழகியல் பாட உதவிக்கல்விப்பணிப்பாளர் ஓவியர் கோ.கைலாசநாதன் கலந்து சிறப்பித்தார். முன்னதாக மாணவர்கள் மாலை அணிவிக்கப்பட்டு பாண்ட் அணியிசை மரியாதையுடன் அழைத்து வரப்பட்டனர். அரங்கில் வாழ்த்துரைகள் இடம்பெற்றதைத்தொடர்ந்து மாணவர்களுக்கு அன்பளிப்புகள் வழங்கப்பட்டன. பெற்றோர்கள் சார்பில் கலந்துகொண்டு உரையாற்றிய யாழ் பல்கலைக்கழக சித்தாயுள்வேத பீட உதவிப்பதிவாளர் கமலேஸ்வரன் அவர்கள் மாணவர்கள் கற்றலில் அதிக அக்கறையுடன் செயற்பட்டு சாதனைகள் படைக்க முயற்சிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். செல்வன்.பூங்குன்றன், செல்வன்.மிகிர்சன், செல்வன்.றஜிதரன், செல்வி.கார்த்திகா, செல்வி.மிதுனா, செல்வி.தனுசியா, செல்வி.சிவப்பிரியா ஆகிய மாணவர்களே கௌரவிக்கப்பட்டனர்.  (படங்களும் தகவலும் :- சிவகலை)

91e540c3-45a3-4b0f-835a-e6445d5cdde9 bd832e8a-6919-4957-abef-c41b20cce0ea be427d84-d744-43d1-8c93-8b1c579b1941 cceb17c3-e15f-4056-a3b3-c84367690fd7 e3a4de16-3f80-4e53-a83e-43deccafe819

SHARE