மாலபே தனியார் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் பல அமைச்சர்களின் உறவினர்கள்

271
மாலபேயில் அமைந்துள்ள இலங்கையின் தனியார் பல்கலைக்கழகத்தில் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் மருமகள் மாத்திரமல்ல, பல அமைச்சர்களின் மகள்மாரும் மருமகள்மாரும் கல்விகற்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாலபே தனியார் பல்கலைக்கழகத்தின் தலைவர் நெவில் பெர்ணான்டோ இதனை தெரிவித்துள்ளார்.

இந்த பல்கலைக்கழகத்தில் குறைந்த கல்வி தகமைகளை கொண்டவர்கள் கல்விப் பயில்வதாக கூறப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில் கருத்துரைத்துள்ள அவர், பல்கலைக்கழகத்தில் சிறந்த பெறுபேறுகளை கொண்டவர்கள் கல்வி பயில்வதாக குறிப்பிட்டுள்ளார்.

உயர்தரத்தில் 3 ஏ சித்திப் பெற்றவர்களும் இங்கு கல்விப் பயில்வதாக அவர் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக இசெட் புள்ளிகளின் அடிப்படையில் அரச பல்கலைக்கழகங்களுக்கு செல்ல முடியாதவர்கள் இங்கு கல்வி பயில்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் பல்கலைக்கழக மாணவர்கள் தமது பெருந்தன்மையை வெளிக்காட்ட வேண்டும். ஏனெனில் கல்வி என்பது அனைத்து மாணவர்களுக்கும் அடிப்படை உரிமையாகும் என்று நெவில் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

malabe-medical-college

SHARE