மினுவாங்கொடையில் சற்றுமுன் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி

281

thuppaakki

மினுவாங்கொட – பீலவத்த பகுதியில் இடம் பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் இன்று காலை இடம் பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் பீலவத்த பகுதியில் உள்ள அடுக்கு மாடிகட்டடத்தில் வைத்தே இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வருகை தந்த இருவரே இந்த துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்த நபரின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக மினுவாங்கொட மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கி பிரயோகத்திற்கான காரணம் இது வரை வெளிவராத நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE