மின்சாரம் தாக்கி முதியவர் பலி

154

வவுனியா, பூவரசங்குளம் பகுதியில் மின்சாரம் தாக்கியதில் 63 வயதுடைய முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பூவரசங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த முதியவர் தனது வீட்டில் வேல‍ை செய்து கொண்டிருந்தபோது நீர் இறைக்கும் இயந்திரத்திற்குச் சென்ற மின்சார இணைப்பின் வயரை பிடித்துள்ளார்.

இதன்போது வயறில் மின் ஒழுக்கு ஏற்பட்டு மின்சாரம் உடலில் பாய்ந்ததால் தூக்கி வீப்பட்டார். உடனடியாக முதியவரை வவுனியா வைத்தியசாலையில் அனுதித்தபோதும் அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE