சட்டவிரோதமாக யானைக் குட்டியினை தன்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் சிறைத்தண்டனைப் பெற்று தற்போது பிணையில் வெளியே வந்துள்ள உடுவே தம்மாலோக தேரர் தனக்கு வெளிநாடு செல்வதற்கு அனுமதியளிக்குமாறு நீதிமன்றிடம் கோரியிருந்தார்.
அதற்கமைய அவருக்கு வெளிநாடு செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது.
இதனையடுத்து வெளிநாடு சென்று வந்துள்ள உடுவே தம்மாலோக தேரர் மீண்டும் தனது கடவுச்சீட்டை உயர்நீதிமன்ற நீதிபதி நிசங்க பந்துலவிடம் இன்று கையளித்துள்ளார்.
லண்டனில் உள்ள பௌத்த நிலையம் ஒன்றில் இடம்பெற்ற மத நிகழ்வுகளில் கலந்துக்கொள்வதற்கு தனக்கு அனுமதி வழங்குமாறு கடந்த 29 ஆம் திகதி கோரியிருந்தமைக்கு அமைய இவருக்கு உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை குறித்த மத நிகழ்வானது இந்த மாதம் 3 ஆம் திகதி தொடக்கம் 7ஆம் திகதி வரை லண்டனில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.