மீனவர்களுக்கு கடலுக்குச் செல்வதை தவிர்த்துக் கொள்ளுமாறு எச்சரிக்கை!

188

இன்றிலிருந்து 4 ஆம் திகதி வரை மன்னாரிலிருந்து கொழும்பு, காலியூடாக பொத்துவில் வரையான கடல் பரப்பில் கடல் அலையானது 2.5 தொடக்கம் 3.5 மீற்றர் வரை உயர்வடையக் கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்வதை தவிர்த்துக் கொள்ளுமாறு இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த எச்சரிக்கை கடற்பரப்பிற்கு மாத்திரமே விடுக்கப்பட்டுள்ளது. நிலப்பரப்பில் பாதிப்புக்கள் காணப்படாது என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது

SHARE