இலங்கை எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்ததன் குற்றசாட்டில் ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் நான்கு பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஒரு படகையும் அதிலிருந்து முருகேசன்,முனியசாமி,ரெனிசன்,சுப்பையா ஆகிய 4 மீனவர்களையும் கடற்படையினர் கைது செய்துள்ளதோடு காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு கொண்டு சென்று குறித்த மீனவர்களிடம் இருந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.