மீனவர்கள் விடுவிக்கப்படுவர், படகுகள் விடுவிக்கப்படாது!– இல. கடற்படை

308

Capture7

இலங்கைக் கடற்பரப்பில் அத்து மீறி பிரவேசித்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள மீனவர்கள் விடுதலை செய்யப்படுவர் என கடற்படை அறிவித்துள்ளது.

சில மாதங்களுக்கு முன்னதாக இலங்கைக் கடற்படையினரால் கைதான 70 இந்திய மீனவர்களையும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவி விஜேகுணரட்ன சிங்கள பத்திரிகையொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

இன்னும் ஒன்றிரண்டு நாட்களில் இவர்கள் விடுதலை செய்யப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

எனினும் கைப்பற்றப்பட்ட 103 படகுகளையும் விடுதலை செய்வது சிரமமானது என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த 70 மீனவர்களையும் விடுதலை செய்வது குறித்து மீன்பிடித்துறை அமைச்சு பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது என குறிப்பிட்டுள்ளார்.

மூன்று மாதங்களுக்கு முன்னதாக 70 இந்திய மீனவர்களை கைது செய்ததுடன், 103 படகுகளையும் கடற்படையினர் கைப்பற்றியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE