
* உங்கள் முகத்தில் உள்ள எண்ணெயை நீக்கவும் மற்றும் துளைகள் அடைப்பை சுத்தம் செய்யவும் மற்றுமொரு பயனுள்ள வழி ஆவி பிடித்தல். ஒரு கிண்ணத்தில் தண்ணீரை கொதிக்க வைத்தபின், அந்த சுடுதண்ணீரின் ஆவி உங்கள் முகத்தில் படுவதுபோல் ஒரு துண்டால் உங்கள் முகத்தை முழுவதுமாக சுற்றவும். இந்த நிலையிலேயே ஒரு சில நிமிடங்கள் இருங்கள். இது துளைகளை ஆழமாக சுத்தம் செய்ய திறக்கும். உங்கள் முகத்தை ஒரு வீட்டில் செய்த துடைக்கும் பொருள்(கீழே குறிப்பிட்டது போல்) கொண்டு மெதுவாக அழுத்தி துடைக்கவும். உடனடியாக இப்போது துளைகள் மூட உங்கள் முகத்தை குளிர்ந்த நீரில் கழுவவும்.
* உங்களுக்கு எண்ணெய் பசை சருமம் இருந்தால், குறைந்தது ஒரு நாளிற்கு இரண்டு முறை கழுவ வேண்டும் மற்றும் எந்த நேரமும் இடையில் உங்களுக்கு அதை முழுவதும் சுத்தம் செய்யும் உந்துதல் ஏற்பட்டால் கழுவ வேண்டும். சொரசொரப்பான துடைக்கும் பொருள் அல்லது நறுமண சோப்பை முகத்திற்கு பயன்படுத்துவதை தவிர்க்கவும். இது உங்கள் சருமத்தின் அமைப்பை மேலும் கெடுத்துவிடும். கிலென்சிங் செய்வதால், உங்கள் சருமம் எண்ணெய் இல்லாமலும் வறண்டு போகாமலும் இருக்க உதவுகிறது.
* கிலென்சிங்க்கு பின் ரோஜா தண்ணீர் போன்ற இயற்கையான வண்ணச்சாயத்தால் டோனிங் செய்வது திறந்திருக்கும் துளைகளை மூட உதவும் மேலும் உங்கள் சருமத்திற்குள் மிகையான எண்ணெயை பூட்டி விடும்.
உங்கள் சருமத்தை எண்ணெய்ப்பதத்தில் இருந்து நிரந்தரமாக தீர்வுகாண முடியாவிட்டாலும், நீங்கள் உங்கள் முகத்தில் சுரக்கும் எண்ணெயின் அளவை ஓரளவிற்கு கட்டுப்படுத்த முடியும். அதிகம் பொரித்த உணவுகளை உண்பதை தவிர்க்கவும் மேலும் உங்கள் எண்ணெய் சருமத்தை மறைக்க ஒப்பனையை அதிகப்படியாக செய்யாதீர்கள். இது நிலைமையை மேலும் மோசம்தான் செய்யும். மிதமான மேலும் உங்கள் சருமத்திற்கு பொருத்தமான எண்ணெய் இல்லாத ஒப்பனை பொருட்களை தேர்வு செய்யுங்கள். இந்த நிலை தொடர்ந்தாலோ அல்லது அதிகரித்தாலோ, ஒரு தோல் நிபுணரிடம் ஆலோசிக்கவும்.