பயணிகள் முச்சக்கரவண்டிகளுக்கான எரிபொருள் ஒதுக்க அதிகரிப்பு இன்று (7) முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, மேல் மாகாணத்தில் உள்ள பயணிகள் முச்சக்கரவண்டிகளுக்கு நாளை முதல் வாராந்தம் 10 லீற்றர் எரிபொருள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மேல் மாகாணத்தில் மேலதிகமாக 5 லீற்றர் எரிபொருள் ஒதுக்கத்தை பெற்றுக் கொள்வதற்காக பதிவு செய்வதற்கு தொடர்ந்தும் சந்தர்ப்பம் காணப்படுவதாக மேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை தெரிவித்துள்ளது.
இதற்கான காலப்பகுதி இன்றுடன் நிறைவடையும் என முன்னதாக அறிவிக்கப்பட்டது.
எனினும், கடந்த முதலாம் திகதி முதல் வெள்ளிக்கிழமை வரையான காலப்பகுதியில் 9 ஆயிரம் முச்சக்கர வண்டிகளே இதற்காக பதிவு செய்துள்ளதாக மேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் முச்சக்கர வண்டிப் பிரிவின் பிரதானி ஜீவிந்த கீர்த்திரத்ன தெரிவித்தார்.
தற்போது முச்சக்கரவண்டிகளுக்கு வழங்கப்படும் 5 லீற்றர் பெற்றோல் ஒதுக்கத்தை 10 லீற்றர்களாக அதிகரிப்பதற்கு அண்மையில் தீர்மானிக்கப்பட்டது.