முட்புதருக்குள் கைவிடப்பட்ட நிலையில் பச்சிளம் குழந்தை: பெற்றோருக்கு வலைவீச்சு

227

இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் முட்புதருக்குள் கைவிடப்பட்ட நிலையில் பச்சிளம் குழந்தை ஒன்றை வழிபோக்கர் ஒருவர் கண்டு மீட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத்தின் உனா பகுதியில் குறித்த சம்பவம் நடந்துள்ளது, சம்பவம் நடந்த பகுதியில் முட்புதருக்குள் பெண் குழந்தை ஒன்று பழந்துணியால் சுற்றப்பட்டு விட்டுச் சென்றுள்ளனர்.

இந்த நிலையில் அப்பகுதி வழியாக சென்ற வழிபோக்கர் ஒருவர் குழந்தையின் அழுகுரல் கேட்டு அதிர்ச்சியடைந்து அந்த முட்புதருக்குள் இருந்து குழந்தையை மீட்டுள்ளார்.

குழந்தை அந்த புதருக்குள் குப்புற படுத்த நிலையில் இருந்துள்ளது. முட்கள் கீறியதால் குழந்தையின் உடம்பில் பல பகுதியில் இருந்து ரத்தம் வழிந்த வண்ணம் இருந்துள்ளது. அந்த குழந்தையை அதன் பெற்றோர் இறக்க வேண்டும் என்றே கைவிட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

குழந்தையை மீட்ட அந்த நபர் உடனடியாக அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு தொடர்பு கொண்டு நடந்தவற்றை எடுத்துக் கூறியுள்ளார். இதனையடுத்து விரைந்து வந்த அவசர சிகிச்சைப்பிரிவினர் குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.

முட்புதருக்குள் வீசப்பட்டிருந்ததால் குழந்தையின் உடம்பில் உள்ள காயங்கள் ஆறி வருவதாகவும் தற்போது உயிருக்கு ஆபத்து எதுவும் இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் குழந்தையை முட்புதருக்குள் வீசிச் சென்ற அதன் பெற்றோரை பொலிசார் தேடி வருகின்றனர். குழந்தையை வேண்டும் என்றே புதருக்குள் கைவிட்டிருப்பதாக கூறும் சமூக ஆர்வலர்கள் குஜராத் உள்ளிட்ட இந்தியாவின் வட மாநிலங்களில் இது வாடிக்கையாகவே நடைபெற்று வருவதாக கூறுகின்றனர்.

SHARE