முதலமைச்சரின் சதியினால் எமது கட்சி அமைச்சுப் பதவியை இழந்தது!

241
முதலமைச்சரின் சதியினால் எமது கட்சி அமைச்சுப் பதவியை இழந்தது என ஜனநாயகக் கட்சியின் மாகாணசபை உறுப்பினர் சட்டத்தரணி அருண தீபால் தெரிவித்துள்ளார்.

மேல் மாகாண சுகாதார அமைச்சுப் பதவி ஜனநாயகக் கட்சிக்கு வழங்கப்படும் என ஊடகங்களில் முன்னதாக தகவல் வெளியிடப்பட்டிருந்தது.

எனினும் நேற்று சுதந்திரக் கட்சியின் லால் மெண்டிஸ் மாகாண சுகாதார அமைச்சராகப் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.

இந்த விடயம் தொடர்பில் கொழும்பு ஊடகமொன்று ஜனநாயகக் கட்சியின மாகாண சபை உறுப்பினர் அருண தீபாலிடம் வினவிய போது…

எமது கட்சிக்கு அமைச்சுப் பதவியொன்று வழங்க இணக்கம் காணப்பட்டிருந்தது. எனினும், முதலமைச்சர் இசுர தேவப்பிரிய செய்த சதி வேலை காரணமாக அமைச்சுப் பதவி கிடைக்கவில்லை.

அமைச்சுப் பதவி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு சொந்தமானதல்ல உண்மையில் அது கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் சிறு கட்சியொன்றுக்கே வழங்கப்பட்டிருக்க வேண்டும்.

நேற்று முன்தினம் இரவு வரையில் இந்தப் பதவி ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர் ஒருவருக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டிருந்தது. நேற்று திடீரென இந்த தீர்மானம் மாற்றப்பட்டதற்கு முதலமைச்சரின் சதி வேலையே காரணமாகும்.

மேல் மாகாண சுகாதார அமைச்சுப் பதவியை சுதந்திரக் கட்சியை சேர்ந்த கீர்த்தி காரியவசத்திற்கு வழங்குமாறு 43 மாகாணசபை உறுப்பினர்கள் கையொப்பமிட்டு ஜனாதிபதியிடம் கோரியிருந்த போது வழங்காது, சுதந்திரக் கட்சியின் சுமித் லால் மெண்டிஸிற்கு அந்தப் பதவியை வழங்கியமையின் ஊடாக சதித் திட்டம் வெளிச்சமாகியுள்ளது என அருண தீபால் தெரிவித்துள்ளார்.

SHARE