முதலமைச்சர் சீ.வியின் கருத்திற்கு பதில் கூற மறுத்த இராணுவத் தளபதி

154

நாட்டின் ஒற்றுமை மற்றும் தேசிய நலன்களைப் பாதுகாக்க இராணுவம் தயாராக இருக்கிறது என்று சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வா தெரிவித்தார்.

தலதா மாளிகையில் நேற்று வழிபாடுகளை முடித்து திரும்பிய சிறிலங்கா இராணுவத் தளபதியிடம், வடக்கு மாகாண முதலமைச்சர் அண்மையில் தேசிய ஒற்றுமைக்கு எதிராக வெளியிட்ட கருத்து தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அவர், “ எல்லா வகையிலும் பொதுமக்களைப் பாதுகாக்க சிறிலங்கா இராணுவம் உறுதி பூண்டுள்ளது.

பொதுமக்களைப் பாதுகாப்பது எமது கடமை., இதனை நாம் செய்வோம் என்பதை, இராணுவத் தளபதி என்ற வகையில் உங்களுக்கு உறுதியாக கூறுகிறேன்.” என்று பதிலளித்தார்.

SHARE