யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற எழுக தமிழ் பேரணியின் போது வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரன் பல கோரிக்கைகளை முன்வைத்தார். ஆனால் குறித்த கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ள முடியாது என போக்குவரத்து அமைச்சர் நிமல்சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே இவ்வாறு கூறினார். தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
வடக்கு முதல்வரின் கருத்துக்களை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால் அதற்கு முன்னர் ஆராய்ந்து பார்க்க வேண்டும் எனவும் கூறினார்.
மேலும், அதிவேக பாதைக்கான கேள்விப்பத்திரம் தனியாரிடம் ஒப்படைக்க மாட்டாது எனவும், ஒரு நிறுவனத்திடம் ஒப்படைப்பதற்குப் முன் அந்த நிறுவனங்களைப் பற்றி நன்கு ஆராய்ந்த பிறகே வழங்கப்படும் என்றும் போக்குவரத்து அமைச்சர் நிமல்சிறிபால டி சில்வா தெரிவித்தார்.