முன்னாள் அமைச்சர் ஜெயராஜ் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் சிறைச்சாலை அதிகாரிகள் பொறுப்பில்!

324
முன்னாள் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ உட்பட 13 பேர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் பூசா முகாமின் பயங்கரவாத தடுப்பு பிரிவினரின் பொறுப்பில் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபரை சிறைச்சாலை அதிகாரிகளின் பொறுப்பின் கீழ் கொண்டு வருமாறு கம்பஹா மேல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே உட்பட 13 பேர் வெலிவேரிய பிரதேசத்தில் உள்ள காந்தி விளையாட்டு மைதானத்திற்கு அருகில் நடந்த தற்கொலை குண்டு தாக்குதலில் கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு பூசா முகாமில் பயங்கரவாத தடுப்பு பிரிவினரினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் காவற்துறை அத்தியட்சகர் லக்ஷ்மன் குரேவையே இவ்வாறு சிறைச்சாலை அதிகாரிகளின் பொறுப்பின் கீழ் கொண்டு வருமாறு, கம்பஹா மேல் நீதிமன்ற நீதிபதி பியசீலி விக்ரமசிங்க மத்துரட்ட உத்தரவிட்டார்.

இந்த வழக்கு விசாரணை எதிர்வரும் நவம்பர் மாதம் 23 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

SHARE