முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஸ மற்றும் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோருடன் இணைந்து கட்சியை வெற்றிபெறச் செய்யத் தயார் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா யுத்தத்தை முன்னெடுத்துக்கொண்டே நாட்டை அபிவிருத்தி செய்தார் எனவும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்து நாட்டை அபிவிருத்திப் பாதைக்கு இட்டுச் சென்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மற்றும் பொதுஜன ஐக்கிய முன்னணி ஆகிய கட்சிகள் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ரத்து செய்வதாகவே ஒவ்வொரு ஜனாதிபதி தேர்தலிலும் வாக்குறுதி அளித்து வந்துள்ளன என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
19ம் திருத்தச் சட்டத்தின் ஊடாக நாட்டில் மீளவும் ஜனநாயகம் நிலைநாட்டப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அனைத்து உறுப்பினர்களையும் ஒன்றிணைத்துக் கொள்வதற்காக தம்மாலான அனைத்து அர்ப்பணிப்புக்களையும் செய்யத் தயார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.