முன்னாள் ஜனாதிபதிக்கு பிரான்ஸ் நாட்டில் கிடைத்த அதியுயர் விருது

176

பிரான்ஸ் நாட்டின் அதியுயர் கௌரவ விருது முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ் அரசாங்கம் வழங்கும் அதி உயர் விருதான ‘கொமான்தியர் டி லா லிஜியோன் தொனர்’ எனும் விருதினால் சந்திரிக்கா குமாரதுங்க கௌரவிக்கப்பட்டுள்ளார்.

பிரான்ஸ் ஜனாதிபதி எமானுவேல் மெக்ரோன் சார்பில் இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் ஜோன் மரன் சூ வின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று நடைபெற்ற வைபவத்தின்போது இந்தக் கௌரவம் சந்திரிக்காவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த விருதைப் பெற்றுள்ள முதலாவது மற்றும் ஒரே இலங்கையர் என்ற பெருமையையும் சந்திரிக்கா பெற்றுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

SHARE