முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குடியிருக்கும் மிரிஹான இல்லத்தில் தற்பொழுது விசேட கலந்துரையாடலொன்று திடீரென நடைபெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் இதில் கலந்துகொண்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.
எதிர்வரும் தேர்தல் நடவடிக்கைகள் தொடர்பில் இந்தக் கலந்துரையாடலின்போது கூடுதல் கவனம் செலுத்தப்படும் என அவ்வட்டாரங்கள் மேலும் சுட்டிக்காட்டியுள்ளன.