முன்னாள் பிரபல பாதாள உலகக்குழுவின் தலைவரொருவரின் மகனை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சொத்தி உப்பாலி என அறியப்படும் முன்னாள் பாதாள உலகக்குழு தலைவரின் மகனையே 2 கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் ஆயுதங்களுடன் கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நபரை கட்டுபெத்த பகுதியில் வைத்து கைதுசெய்துள்ளதாக தெரிவிக்கும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.