முன்னாள் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் வசந்தன் அவர்களுக்கு அஞ்சலி….!

227

 

27வது வீர மக்கள் தினத்தை முன்னிட்டு மறைந்த முன்னாள்  வன்னி மாவட்ட பாரளுமன்ற உறுப்பினரும், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி,  தமீழீழ  மக்கள் விடுதலை கழகத்தின் மூத்த உறுப்பினருமான  தோழர் ச.சண்முகநாதன்(வசந்தன்) அவர்களுக்கு வவுனியா இறம்பைக்குளத்தில்  அமைந்துள்ள அவரது நினைவுத்தூபியில் மறைந்த 18 வது நினைவு  தினமான 15.07.2016 அன்று   அவர்களை நினைவு கூரும் முகமாக விளக்கேற்றி, மலர்மாலைகள் அணிவித்து, மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. இவருடன் மறைந்த அவரது புதல்வர்  ச.வக்சலன் அவர்களுக்கும் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இன் நிகழ்வில் தோழர் வசந்தனின் அன்புத் தாயார்,  ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் உப தலைவர்களில் ஒருவரும்  வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகர பிதாவுமாகிய   திரு. க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்களும், ஈரோஸ் அமைப்பின் தலைவரும், தோழர் வசந்தனின் சகோதரருமான திரு ச.துஸ்யந்தன், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின்  தேசிய அமைப்பாளர்  திரு.யோகராஜன், பிரபல வர்த்தகர் செந்தில், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் செயற்குழு உறுப்பினர்களான திரு மு.கண்ணதாசன்,  திரு சு.காண்டீபன், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் சிரேஷ்ட உறுப்பினர்கள், தமிழ் தேசிய இளைஞர் கழகத்தினர்  மற்றும்  உறவுகளுடன் சமூக ஆர்வலர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
7d648a54-d47a-432e-9589-234e5f231b16 8aae6b9c-4fcd-4ba9-9ffa-9bd829e1e16c 10d87f7d-8053-4e23-ab81-758859dcc908 75b7d96a-ce10-4bcc-9363-6c019b75810a 89ace99e-cb8b-4c92-b23c-6dfe1178405b 552e1228-26b8-453e-8823-b97f49566d9b
SHARE