முன்னைய காலங்களில் பல்வேறு அடக்கு முறைக்கு உள்ளானேன்: சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா

321
முல்லைத்தீவு பாண்டியன்குளம் பிரதேசத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரை கூட்டம் மாந்தை கிழக்கு பிரதேசசபையின் முன்னாள் உப தவிசாளர் செந்தூரன் தலைமையில் நேற்று நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட முன்னாள் பிரதிதிட்டமிடல் பணிப்பாளரும் முள்ளிவாய்க்கால் வரை சென்று போரின் போது தனது காலை இழந்தவருமான வன்னி மாவட்ட வேட்பாளர் திருமதி.சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா உரையாற்றினார்.

எனக்கு இப்பொழுது இரத்த அழுத்தம் குறைந்திருக்கின்றது. ஏனெனில் நான் அரச உத்தியயோகத்தில் இருந்த போது மஹிந்த ராஜபக்சவின் ஆட்சியின் கீழ் அமைச்சர்களாலும் அடிவருடிகளாலும் நான் மிகுந்த அழுத்தங்களுக்கும் துன்பங்களுக்கும் உள்ளானேன் என தெரிவித்தார்.

SHARE