மும்மூர்த்திகள் தென்னாபிரிக்கா பயணம் !! 9ம் திகதி முக்கிய சந்திப்பாம்!!

684

untitled

தென்னாபிரிக்காவின் சமாதான முயற்சிகளில் பங்கெடுக்கமாட்டோமென கூறி வந்த கூட்டமைப்பு தலைமை தற்போது அதனை கைவிட்டுள்ளமை அம்பலமாகியுள்ளது. எதிர்வரும் 9ம் திகதி கூட்டமைப்பு தலைவர் சம்பந்தர் உள்ளிட்ட குழுவொன்று ஆரம்ப கட்டப்பேச்சுக்களிற்காக அங்கு பயணிக்கவுள்ளமையினை அம்பலப்படுத்தியுள்ளார் சிவாஜிலிங்கம். அதே வேளை   இலங்கையின் இனப்பிரச்சினைத் தீர்வு விடயத்தில் தென்னாபிரிக்கா முன்னெடுக்கவுள்ள நடவடிக்கையினை ஏற்கமுடியாது என்றும் அவ்வாறான முயற்சியினை நிராகரிப்பதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினர் என்.கே.சிவாஜிலிங்கம் மேலும் தெரிவித்துள்ளார்.இன்று யாழ்.ஊடக அமையத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பங்கு கொண்டு கருத்தத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்டது இனப்படுகொலையே என்றும் இனப்படுகொலை தற்போதும் தொடர்வதாகவும் சுட்டிக்காட்டியதுடன் ஜெனீவாத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோது தென்னாபிரிக்க அரசு இலங்கை அரசாங்கத்துக்கு சார்பான கருத்துக்களை வெளியிட்டதுடன் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்கவில்லை என்பதையும் அவர் குறிப்பிட்டார். தமிழ் மக்களின் உண்மையான நிலைப்பாட்டினைப் புரிந்து கொள்ளாத தென்னாபிரிக்க அரசு நடுவு நிலைமை வகிப்பதற்கு தகுதியற்றது என்றும் தெரிவித்தார்.

தென்னாபிரிக்க போராட்டத்தில் அவர்கள் இறுதியில் வெற்றி பெற்று நாடொன்றிருக்கின்றது. அங்கு பெரும்பான்மையினரை சிறுபான்மையினர் அடக்கி ஆண்டிருந்தனர். ஆனால் இங்கு நேர்மாறான நிலையே உள்ளது. எங்களிற்கு ஏதும் கி;ட்டியிருக்கவில்லை. எந்த அடிப்படையினில் இனப்படுகொலை செய்த இந்த கொலையாளிகளை மன்னிப்பதெனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

SHARE