முருகன் புலிகளின் இரண்டாம் கட்ட தலைவர் இல்லை..! கடும் கோபத்தில் பிரியங்கா..! நளினியின் ஆதங்கம்

214

priyanka-nalini-520x300

இந்திய முன்னாள் பிரதமர் ராஜூவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டணை பெற்றுள்ள நளினியின் சுயசரிதை அடங்கிய நூல் இன்று மாலை வெளியிடப்பட்டுள்ளது.

சிறையிலிருக்கும் நளினி வழங்கிய தகவல்களை மூத்த பத்திரிகையாளரான பா. ஏகலைவன் ராஜீவ் கொலை மறைக்கப்பட்ட உண்மைகளும் பிரியங்கா நளினி சந்திப்பும் என்ற பெயரில் நூலை தொகுத்து வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்னர் வேலூர் சிறையில் பிரியங்கா காந்தி தம்மை சந்தித்த போது இடம்பெற்ற சம்பவங்களை அவர் தனது நூலில் பகிரங்கப்படுத்தியுள்ளார்.

இந்த விடயம் சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த விடயம் தொடர்பில் அந்த புத்தகத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

சாதாரண உறுப்பினர்…

பிரியங்கா காந்தியுடனான சந்திப்பின் போது விடுதலைப் புலிகள் இயக்கத்தின் 2ஆம் கட்ட தலைவர் முருகன் என்பதை மறுத்து அதற்கான விளக்கங்களை கூறினேன்.

புலிகளின் 2ஆம் கட்ட தலைவராக இருந்திருந்தால் முருகன் எளிதாக இலங்கைக்கு திரும்பியிருக்க முடியும்.

எனினும், சி.பி.ஐ அவர் இலங்கைக்கு செல்ல படகு கிடைக்காமல் வேதாரண்யத்தில் இருந்து காத்திருந்துவிட்டு திரும்பினார் என்கிறது. அப்படியானால் அவர் ஒரு சாதாரண உறுப்பினராகத்தான் இருந்திருக்கிறார்.

பேருந்தில் வெடிகுண்டு?

சென்னை பாரிமுனையில் இருந்து வெடிகுண்டை கட்டிக் கொண்டு பேருந்தில் சென்றதாக சி.பி.ஐ சொல்கிறது. பேருந்தில் நின்று கொண்டு செல்லும்போது வெடிகுண்டு வெடித்துவிடும் என்ற முன்யோசனை எதுவும் இல்லாமலா செல்வார்கள்?

எங்களுக்கு தெரியாது…

சதிச் சம்பவம் தொடர்பாக எங்களுக்கு தெரிந்திருந்தால் நாங்கள் பதற்றத்துடன் இருந்திருப்போம். அன்றைய நாளில் என் அலுவலகத்தில் எனக்கு கூடுதலாக பணிநேரம் கொடுத்தனர். அதையும் கூட முடித்துக் கொடுத்துவிட்டுதான் வந்தேன்.

கடும்கோபத்தில் பிரியங்கா

இதையெல்லாம் பிரியங்கா காந்தி ஏற்றுக் கொண்டபோதும், ஒட்டுமொத்தமாக எல்லோருமே அப்பாவிகள் என்கிறீர்களா? நிரபராதிகள் என கூற வருகிறீர்களா?

என முகம் சிவக்க கடுங்கோபத்துடன் கூறியபோது அதுதான் உண்மை என கூற முடியாமல் அமைதியாகிப் போனேன்.

ஏற்க முடியாத பிரியங்கா

ஏனெனில் சி.பி.ஐ ஜோடிப்புகள், நீதிமன்ற தீர்ப்புகள் அப்படித்தான் இருந்தன. இந்த நாட்டின் மிகப் பெரிய தலைவரான தன்னுடைய தந்தையின் மரணத்துக்கு நியாயமான நீதி கிடைக்கவில்லை என்பதை ஏற்றுக் கொள்ள முடியாதவராகவே பிரியங்கா இருந்தார்.

ஆனால் அவர் மனதில் நான் நிரபராதி என்பது பதிவாகி இருந்தது.

SHARE