முற்றிய வாக்குவாதம்: இலங்கை ரசிகரை கலாய்த்து தள்ளிய அஸ்வின்

237
இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் டுவிட்டரில் தன்னை விமர்சித்த இலங்கை ரசிகரை கலாய்த்து தள்ளியுள்ளார்.டுவிட்டரில் அஸ்வினை மற்ற அணி ரசிகர்கள் அடிக்கடி சீண்டி வருவதும், அவர் பதிலடி கொடுப்பதும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியின் போது இலங்கை ரசிகர் ஒருவர் அஸ்வினிடம், “நீங்கள் அவுஸ்திரேலியாவை வீழ்த்தி விட்டால் நான் கிரிக்கெட் பார்ப்பதை விட்டுவிடுகிறேன்” என்று கூறினார்.

இதற்கு அஸ்வின், “உனக்கு கிரிக்கெட் பார்ப்பதை விட அதிக வேலைகள் இருக்கும். இது உனது குடும்பத்திற்கும் நல்லது தான். வாழ்த்துக்கள்” என்று பதிலளித்தார்.

அன்று நடந்தப் போட்டியில் கோஹ்லியின் அதிரடியால் இந்தியா அவுஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரை விட்டு வெளியேற்றியது.

மும்பையில் இன்று நடைபெறும் 2வது அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா- மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதுகின்றன.

இந்நிலையில் அதே இலங்கை ரசிகர் மீண்டும் அஸ்வினை வம்பிழுக்க தொடங்கினார்.

அந்த இலங்கை ரசிகர் “கடைசியாக சிரித்துக் கொள்ளுங்கள், எனது நண்பர் கெய்ல் உங்கள் அனைவரையும் புரட்டி எடுக்கப் போகிறார், அரையிறுதியில் விளையாடாமல் இருப்பது உங்களுக்கு நல்லது” என்று கிண்டலடித்தார்.

இதற்கு அஸ்வின், “நீ இன்னுமா கிரிக்கெட் பார்த்துக் கொண்டிருக்கிறாய், உன்னிடம் பேசினது எனது தவறு தான்” என்று பதிலளித்தார்.

அதற்கு அந்த ரசிகர், “நான் கிரிக்கெட் பார்ப்பதை நிறுத்திவிட்டேன். ஆனால் கெய்லுக்காக நாளை நான் போட்டியை பார்க்கப் போகிறேன். இந்திய வீரர்களின் தோல்வி முகத்தை பார்க்க எனக்கு பிடிக்கும்” என்றார்.

இப்படி வாக்குவாதம் முற்றிய நிலையில் அஸ்வின், “நாய் வண்டி வரட்டும் உன்ன‌ புடிச்சு கொடுக்குறேன். நாளைக்கு என்ன நடந்தாலும் எனக்கு கவல இல்ல“ என்று தமிழிலே கலாய்த்து விட்டார்.

SHARE