முல்லைத்தீவில் சட்டவிரோத செயற்பாடுகளுக்கு பொலிஸார் துணை நிற்கின்றனரா?

217

illegal-logging-600x381

முல்லைத்தீவு, மாந்தை கிழக்கு பிரதேசத்தில் இடம்பெற்று வரும் சட்டவிரோத செயற்பாடுகளுக்கு பொலிஸார் மற்றும் அதிகாரிகள் துணை நிற்பதாக பொதுமக்களினாள் குற்றம்சாட்டப்பட்டுள்ளன.

முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்தில் அண்மையில் குறித்த பிரதேசத்தின் அபிவிருத்திக்கு பயன்படுத்த தடை விதிக்கப்பட்ட வளங்கள் யாவும் சட்டவிரோதமான முறையில் வெளியிடங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்ற நிலையிலேயே பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இந்தப் பகுதியில் உள்ள பெறுமதி வாய்ந்த காட்டுமரங்கள், மணல், கிரவல் என அபிவிருத்திக்கு தேவையான வளங்கள் தமது பகுதியில் இருந்து வகை தொகையின்றி வெளிமாவட்டங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றதாகவும்.

குறிப்பாக வீட்டுத்தேவைக்கு மணல் பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் இருந்து நாள் ஒன்றுக்கு ஐம்பது லோட் மணலுக்கு மேல் வெளியிடங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன என்றும்.

அத்துடன் பெறுமதியான காட்டு மரங்கள் சட்டவிரோதாமாக வெட்டப்பட்டு அவை மிகவும் பாதுகாப்பாக அதிகாரிகளினதும் பொலிசாரினதும் துணையுடன் வெளியிடங்களுக்கு பாதுகாப்பாக கொண்டு செல்லப்படுகின்றன என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எனவே இதில் உரிய தரப்பினர் கவனம் செலுத்த வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SHARE