முல்லைத்தீவு ஒதியமலை படுகொலை நினைவிலிருந்து மீழ்ச்சி காணுமா…? 

303

முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் – ஒதியமலை கிராம சேவையாளர் பிரிவு மக்கள் பல்வேறு துன்பங்களை அனுபவித்து வருவதாக அப்பகுதி மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

கடந்த 1982 ஆம் ஆண்டிலிருந்து பல்வேறு துன்பங்களை சந்தித்து வந்த தாம் இன்றுவரை அந்த துன்பத்திலிருந்து மீளவில்லை எனக் குறிப்பிடுகின்றனர்.

யுத்தம் முடிவடைந்து மீள்குடியேற்றப்பட்ட நிலையில், இன்றுவரை தமக்கான மின்சார வசதிகள் ஏற்ப்படுத்தி கொடுக்கப்படவில்லை எனக் குறிப்பிடும் அப்பகுதி மக்கள்,

தமது கிராமமே இருட்டில் உள்ளதாகவும் காட்டுப் பிரதேசமாகவுள்ளதனால் காட்டு யானைகள் மற்றும் விசயந்துக்களால் பெரிதும் பாதிக்கப்படுவதாகக் தெரிவிக்கின்றனர்.

1984 ஆம் ஆண்டு இலங்கை போக்குவரத்து சபை தமது பகுதிக்கான பேரூந்து சேவையை வழங்கியுள்ளதாகவும் தற்போது இந்த சேவை இடம்பெறுவதில்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

பல்லாயிரக்கணக்கான வயல் செய்கை பண்ணக்கூடிய அளவிற்கு ஐந்து குளங்கள் புனரமைக்கப்படாதுள்ளது எனவும் அவற்றை திருத்தி தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

1982 ஆம் ஆண்டு 150 மாணவர்களுடன் இயங்கிய பாடசாலை தற்போது ஐந்து மாணவர்களுடன் கற்றலுக்கான சுழல் இல்லாத நிலையில் இயங்குகின்றது.

இதுதொடர்பாக மக்கள் கருத்து தெரிவிக்கும்போது, இடப்பெயர்வுக்கு முன் எமது பகுதியில் 110 குடும்பங்கள் வசித்து வந்தனர்.

1984 ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தால் ஒதியமலை படுகொலை நடாத்தப்பட்டதாலும் இவ்வாறான அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யாததாலும் 1984 ஆம் ஆண்டு இடம்பெற்ற இன அழிப்பு அச்சம் காரணமாகவும் மக்கள் வேறு இடங்களில் குடியேறி வருகின்றனர்.

இங்கு வருகின்ற கிராம சேவையாளர்கள் அவர்களுக்கான பதிவுகளை மாற்றி கொடுக்கிறார்கள். பாடசாலை அதிபர் மாணவர்களை வேறு இடத்துக்கு செல்ல அனுமதியளிக்கிறார்.

இவ்வாறு எமது அதிகாரிகளும் எமது இடத்தில் யாருமில்லாத இடமாக மாற்றி இந்த நிலங்களையும் சிங்கள மக்கள் கைப்பற்ற மறைமுகமாக உதவி செய்கிறார்களா என எண்ணத் தோன்றுகிறது.

தற்போது 50 குடும்பங்களே இங்கு தற்போது வசிப்பதாகத் தெரிவித்த கிராம வாசியொருவர் தெரிவிக்கையில், “எமது கிராமத்திற்கான அடிப்படை வசதிகள் சரிவர ஏற்படுத்தி தரவில்லை.

ஆனால், இதிலிருந்து ஒன்றரை கிலோமீற்றர் தூரத்திலுள்ள சிங்கள கிராமமான எமது கிராமத்தில் மின்சாரம் அனைவருக்கும் வழங்கப்பட்டு, வீதிகள் காபட் இடப்பட்டு காட்டு யானைகள் அந்த இடத்துக்கு செல்லாது, மின்சார வேலிகளும் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.

நாங்கள் தமிழர்கள் என்பதால் இந்த நிலையா? எதற்காக இவ்வாறு செய்கிறார்கள் என தெரிவித்தார். பொன்னுவிளையும் தமிழர் பூமியான இந்தப் பகுதியில் நல்ல விளைச்சல் தரும் வயல் நிலங்கள் காணப்படுகிறது.

தணிக்கல் கிராமத்திலிருந்த மக்கள் இப்போது அந்த இடத்தில் குடியேறவில்லை. 1984 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட அந்த துயரச் சம்பவம் காரணமாக அங்கு தற்போது யாருமில்லை. அங்கு தற்போது விவசாயம் மேற்கொள்வதற்காக மட்டும் அப்பகுதிக்கு சென்று வருகின்றனர்.

இதனைவிட பல ஏக்கர் காணிகளை வனவள பாதுகாப்பு திணைக்களம் கைப்பற்றியுள்ளது. எம்மை எவ்வாறெல்லாம் துன்பப்படுத்தி வெளியேற்றி இந்த இடத்தையும் சிங்களவர்களுக்கு வழங்கி, எம்மை நிற்கதிக்குள்ளாக்கும் நடவடிக்கைக்கு சம்மந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.mulimuli01muli02

SHARE