முல்லைத்தீவு மாவட்டதின் மூன்றாவது ஒருங்கிணைப்பு குழுகூட்டம்

80

முல்லைத்தீவு மாவட்டதின் இவ்வாண்டுக்கான மூன்றாவது ஒருங்கிணைப்பு குழுகூட்டம் நடைபெற்றுள்ளது.

குறித்த கூட்டம் மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று காலை 10 மணியளவில் மாவட்ட அரசாங்க அதிபரின் அறிமுகவுரையுடன் இணைத்தலைவர்களான நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன், பிரதி அமைச்சர் காதர் மஸ்தான் ஆகியோர் தலைமையில் ஆரம்பமாகியுள்ளது.

இதில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சாந்தி சிறிஸ்கந்தராஜா, வடமாகாண சபை உறுப்பினர்களான து.ரவிகரன், கமலேஸ்வரன், அமைச்சின் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள் பிரதேச செயலாளர்கள் மற்றும்பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப்பலர் கலந்து கொண்டுள்ளனர்.

 

 

 

 

 

SHARE