முல்லைத்தீவு மாவட்டத்தில் வெள்ளத்தினால் 239 குடும்பங்கள் பாதிப்பு.
முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவில் திருமுறுகண்டி இந்து
வித்தியாலயத்தில் 32 குடும்பமும் 105 அங்கத்தவர்கள் தங்கவிடப்பட்டுள்ளனர்.
பேராறு தமிழ் வித்தியாலயத்தில் 61 குடும்பங்கள் 160 அங்கத்தவர்கள்
தங்கவிடப்பட்டுள்ளது. பண்டார வன்னியனில் 250 குடும்பங்கள் 206 பேர் முத்தையன்
கட்டு இடதுகரைப்பாடசாலையில் 52 குடும்பம் 125 பேர் தங்கவிடப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேசசெயலகபிரிவில் கள்ளப்பாடு 22 குடும்பம்
54 அங்கத்தவர் குமாரபுரத்தில் 18 குடுமபம் 65 அங்கத்தவர்களும் வண்ணாங்குளம்
8குடும்பம் 25 பேர் நீராவிப்பிட்டி 80 குடும்பம் 280 பேர் முள்ளியவளை 7
குடும்பம் 37 அங்கத்தவர் கொக்குத்தொடுவாய் 9 குடும்பம் 18 அங்கத்தவர்கள்
தண்ணீமுறிப்பு 18 குடும்பம் 41 அங்கத்தவர் கொக்குளாய் 341 குடும்பமும் 783
அங்கததவர்கள் தங்கவிடப்பட்டுள்ளது.
மாந்தை கிழக்கு பிரதேச செயலக பிரிவில் 9 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளது.
துணுக்காய் பிரதேச செயலக பிரிவில் கல்விழானில் 3 குடும்பம் 13 அங்கத்தவர்
தென்னியங்குளத்தில் 31 குடும்பம் 107 பேர் புத்துவெட்டுவானில் 40 குடும்பம்
78 அங்கத்தவரும் பழைய முறுகண்டியில் 27 குடும்பம் 48 அங்கத்தவர்களும்
வெள்ளத்தினால் முல்லைத்தீவு மாவட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என முல்லைத்தீவு
மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதிகேதீஸ்வரன் அவர்கள் தெரிவித்துள்ளமை
குறிப்பிடத்தக்கது.
புளியங்குளம்.
கோபிகா.