முல்லைத்தீவு முழுமையான ஆக்கிரமிப்பிற்கு உள்ளாகும் அபாயம்

101

முல்லைத்தீவு மாவட்டம் தினம் தினம் ஆக்கிரமிக்கப்பட்டு, முழுமையான ஆக்கிரமிப்பிற்கு உள்ளாகும் அபாயம் தோன்றியுள்ளதாக வட மாகாண கல்வி  அமைச்சர் க.சர்வேஸ்வரன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கூறுகையில், மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண்பதற்கு பெற்றோர்களின் பங்களிப்பு மிக மிக முக்கியமானது. கடந்த காலங்களில் கிராமப்புற பாடசாலைகளில் கல்வி கற்ற பலர் இன்று உயர் பதவிகளை வகித்து வருகின்றார்கள். ஆனால் இப்போது நகர்ப்புற பாடசாலைகளை நோக்கி நகருகின்றனர். நகர்ப்புற பாடசாலைகளில் எங்கள் பிள்ளைகள் படிப்பது பெருமையா? அல்லது நகர்ப்புற பாடசாலைகளுக்கு பெருமையா? என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்

SHARE