முல்லைத்தீவு ஒட்டிசுட்டான் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரிப்பட்ட முறிப்பு பகுதி இராணுவ முகாமொன்றில் கடமையாற்றும் இராணுவ சிப்பாய் ஒருவர் தனக்கு தானே துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
நேற்று செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 64ம் படைப்பிரிவை சேர்ந்த விமலரட்ன என்பவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த தற்கொலைச் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை ஒட்டிசுட்டான் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர் .