முள்ளிவாய்க்கால் கிழக்குக் கிராமத்தின் வேண்டுகோள்

245

கட்டடம் அமைத்து தளபாடம் கொள்வனவு செய்ய ரூ 6 இலட்சம் மதிப்பிட்டுள்ளார்கள். கட்டடம் அமைத்தால் தாம் ஏனைய உதவிகளைச் செய்வதாக பிரதேச சபை அறிவித்துள்ளது. பார்வையிட்டுச் சென்ற எந்த ஒரு அரசியல் வாதியும் இதற்கு உதவ முன்வரவில்லை.

இறுதி யுத்தத்தில் உயிர் தப்பி மீண்ட இளந்தலைமுறை இங்கு வேலைவாய்ப்புக்காக ஏங்கி நிற்கிறது. இந்திய வீட்டுத் திட்டத்தால் ஏமாற்றப்பட்டவர்கள் இங்கு வாழ்கிறார்கள்.

முள்ளிவாய்க்கால் கிழக்குக் கிராமத்தின் கோரிக்கையை இணைத்துள்ளேன். உரியவர்களிடம் சேர்ப்பியுங்கள்.
தொடர்பு:
தவச்செல்வம் –  தலைவர் பாரதியார் சனசமூக நிலையம்- 0779196151

இந்த வேண்டுதல் ஒரு சமூக ஆர்வலர் எனக்கு அனுப்பி வைத்தது… உதவி செய்ய முன்வருபவர்கள் உரியவர்களுடன் நேரில் தொடர்பு கொள்ளவும்… அதேவேளை ஒரே இடத்திற்கு பலர் ஒருவருக்கு ஒருவர் தொடர்பில்லாமல் பணத்தை அனுப்பும் போது தேவைக்கு அதிகமாக பணம் செல்வதற்கு வாய்ப்பு உண்டு.  அவ்வாறு தேவைக்கு அதிகமாக பலர் அனுப்பும் போது பணம் தவாறாக பயன்படுத்தப்படுவதற்கான வாய்ப்பு உண்டு… எனவே இவ்வாறான உதவிகள் செய்ய முன்வருவொர் வெளிப்படையாக அறிவித்து அந்த உதவியை செய்தால் கேட்கப்பட்ட தொகை நிறைவானபின் உதவியை நிறுத்தலாம். … மிகுதியை ஏனைய முக்கிய தேவைகளுக்கு அனுப்பலாம்…

SHARE